Skip to main content

சீயோனிலே என் திட அஸ்திபாரம் கிறிஸ்துவே அவர் நான் என்றும் நம்பும் கன்மலை


சீயோனிலே என் திட அஸ்திபாரம் கிறிஸ்துவே அவர்
நான் என்றும் நம்பும் கன்மலை

கலங்கிடுவேனோ பதறிடுவேனோ
கர்த்தரில் விசுவாசம் இருக்கையிலே
அசையா என் நம்பிக்கை நங்கூரமே
இயேசுவில் மாத்திரமே - சீயோனிலே

புயலடித்தாலும் அலை மோதினாலும்
எவர் எனக்கெதிராய் எழும்பினாலும்
எனக்கு எட்டாத உயரத்திலே
எடுத்தவர் நிறுத்திடுவார் - சீயோனிலே

வியாதியானாலே காயம் வருந்தி
வாடியே மரண நிழல் சூழினும்
விசுவாசத்தின் கரத்தாலவர்
வாக்கை நான் பற்றிடுவேந் - சீயோனிலே

மா பரிசுத்த விசுவாசத்தாலே
மா பரிசுத்த ஸ்தலம் ஏகிடவே
திரை வழியாய் தம் சரீரதினால்
திறந்தாரே தூய வழி - சீயோனிலே

நான் விசுவாசிப்போர் இன்னா ரென்றறிவேன்
என்னையே படைத்திட்டேன் அவர் கரத்தில்
முடிவு வரை என்னை நடத்திடுவார்
முற்றுமாய் இரட்சிப்பாரே - சீயோனிலே