Skip to main content

சீயோனே நீ விழித்தெழும்பிடுவாய் சாலேமின் ராஜனிதோ வருவதால்


சீயோனே நீ விழித்தெழும்பிடுவாய்
சாலேமின் ராஜனிதோ வருவதால்

அனுபல்லவி
சீல குணமுள்ள அன்பின் தயாளன்
ஆகாய மீதினில் எழுந்திதோ வாரார் - சீயோனே

பூமண்டலங்கள் கிடுகலங்கிடுதே
வான மண்டலங்களும் நடுங்கிடுதே
பாசமில்லா உம்மானிடர் பூவில்
பயந்தங்கு மிங்கும் ஓடுவதாலே - சீயோனே

கொலு மண்டலங்கள் திகிலடைந்திடுதே
கொடிய செயலும் தோன்றிடுதே
உதவியற்ற நின் உத்தமர் தவிப்பை
உந்தன் கரத்தால் தீர்த்திடுமிப்போ - சீயோனே

மாய உலகத்தை வெறுத்துவிட்டால் நீ
மாட்சி தங்கும் நகர் சேரலாமே
மகிமையின் சாயல் அணிந்தவராய் நாம்
மணவாளனோடு ஏகிடுவோமே - சீயோனே

பலவித துன்பங்கள் நிறைந்துமே வருதே
காரிருள் நாட்களும் நெருங்கிடுதே
அந்தகாரப் பிரபு வெளியாகு முன்னே
சந்தோஷ ராஜ்யத்தில் சேர்ந்திடலாம் நாம் - சீயோனே

திருச்சபையே உன் தீபங்களெல்லாம்
சூர்யப்பிரபையாய்த் திலங்கட்டுமே
மகிமையின் இரதத்துடன் உதித்திடும் போது
மணவாளனோடு நாம் மறுரூபமாவோம் - சீயோனே