Skip to main content

வானமும் பூமியும் மாறிடினும் வாக்குமாறாத நல்தேவனவர்


வானமும் பூமியும் மாறிடினும்
வாக்குமாறாத நல்தேவனவர்
காத்திடுவார் தம் கிருபை யீந்தென்றும்
கர்த்தனேசு உந்தன் மீட்பராமே
கல்வாரி இரத்தம் பாய்ந்திடுதே
கன்மலைக் கிறிஸ்துவின் ஊற்றதுவே
பாவங்கள் நீங்க சாபங்கள் போக்க
தாகங்கள் தீர்த்திட அழைக்கின்றாரே - கல்

கல்வாரி மலைமேல் தொங்குகின்றார் (2)
காயங்கள் கண்டிட வந்திடாயோ
ரோகங்கள் மாறிடும் ஔஷதமே
தாயினும் மேலவர் தயையிதே - கல்

கிருபையின் காலம் முடிந்திடுமுன் (2)
நொறுங்குண்ட மனதாய் வந்திடுவாய்
பூரணனாய் உன்னை மாற்றிடவே
புதுமையாம் ஜீவனால் நிறைந்திடுவார் - கல்

கிறிஸ்துவின் மரண சாயலிலே (2)
இணைந்திட இன்றே வந்திடுவாய்
வானவரின் பாதம் தாழ்ந்திடுவாய்
பாரங்கள் யாவையும் ஏற்றிடுவார் - கல்