Skip to main content

வாருமே பரிசுத்த ஆவியானவரே வந்து எங்களை நீர் மாற்றிடுமே


வாருமே பரிசுத்த ஆவியானவரே
வந்து எங்களை நீர் மாற்றிடுமே
ஆவியின் கனிகளால் நிறைத்திடுமே
தேவன்பின் வெள்ளம் என்னில் புரளட்டுமே

மற்றோரை குறை சொல்லுதல்
நீர் வந்தாலே ஓடிவிடும்
அன்பினால் நிறைந்திடுவேன்
நாவை நான் காத்திடுவேன்
உன் அபிஷேகத்தினால்
நாவை நான் காத்திடுவேன் - வாருமே

தீய எண்ணம் ஓடிவிடும்
கிறிஸ்துவின் சிந்தை வரும்
ஆத்தும பாரத்தினால்
அனுதினம் ஜெபித்திடுவேன்
ஆவியானவருடன் நான்
அனுதினம் ஜெபித்திடுவேன் - வாருமே

சுய நலம் மறைந்து விடும்
பிறர் நலம் வந்து விடும்
மற்றோரின் குறைவதிலே
உதவிடும் சிந்தை வரும்
உம் அபிஷேகத்தினால்
உதவிடும் சிந்தை வரும் - வாருமே

வெற்றியும் செழிப்பின் வாழ்வும்
நீர் வந்தாலே வந்து விடும்
வேதத்தை தியானிப்பேனே
புத்தியால் நடந்திடுவேன்
உம் அபிஷேகத்தினால்
புத்தியால் நடந்திடுவேன் - வாருமே

வல்லமை பெலனும் என்னில்
நீர் வந்தாலே வந்து விடும்
வெடித்து சிதறிடுவேன்
உலகெங்கும் சென்றிடுவேன்
நற்செய்தி சொல்லிடுவேன்
நற்பெயர் பெற்றிடுவேன் - வாருமே