Skip to main content

வாரும் ஐயா போதகரே வந்தெம்மிடம் தங்கியிரும்


வாரும் ஐயா போதகரே
வந்தெம்மிடம் தங்கியிரும்
சேரும் ஐயா பந்தியினில்
சிறியவராம் எங்களிடம்

ஒளிமங்கி இரளாச்சே
உத்தமனே வாரும் ஐயா
கழித்திரவு காத்திருப்போம்
காதலனே கருணை செய்யும்

நான் இருப்பேன் நடுவில் என்றார்
நாயகன் உன் நாமம் நமஸ்கரிக்க
தாமதமேன் தயை புரிய
தற்பரனே நலம் தருவாய்

உந்தன் மனை திருச்சபையை
உலகமெங்கும் உயர்த்திடுவாய்
பந்தமறப் பரிகரித்தே
பாக்யம் அளித்தாண்டருள்வாய்