Skip to main content

பலிபீடத்தில் வைத்தேன் என்னை பாவி என்னை ஏற்றுக் கொள்ளும்


பலிபீடத்தில் வைத்தேன் என்னை
பாவி என்னை ஏற்றுக் கொள்ளும்
உம்மில் நான் இன்றி உலகினில்
உண்மையாய் ஜீவிப்பேனோ
உத்தமனாய் ஜீவித்திட
உம் கிருபை ஈந்திடும்

வாலிப நாளில் வாஞ்சையுடன்
வந்தேன் நின் திருப்பாதம்
வாரும் ஐயா வந்து என்னை
வல்லமையால் நிரப்பும் - பலி

நிலையில்லா இந்த பூவுலகில்
நித்தம் உம் பாதையிலே
நின் சித்தம் போல் உம் கரத்தால்
நித்தம் வழி நடத்தும் - பலி

பரிசுத்தமில்லா இவ்வுலகில்
பரிசுத்தமாய் ஜீவிக்க
பரிசுத்தமான உம் ரத்தத்தால்
பரிசுத்தமாக்கிடும் - பலி