Skip to main content

புதிய வாழ்வு தரும் புனித ஆவியே பரிசுத்த தெய்வமே பரலோக தீபமே


புதிய வாழ்வு தரும் புனித ஆவியே
பரிசுத்த தெய்வமே பரலோக தீபமே

இருள் நிறைந்த உலகத்திலே
வெளிச்சமாய் வாருமையா
பாவ இருள் நீக்கி பரிசுத்தமாக்கும்
பரமனே வாருமையா
வரவேண்டும் வல்லவரே
வரவேண்டும் நல்லவரே
வரவேண்டும் வரவேண்டும்

தடைகள் நீக்கும் தயாபரரே
உடையாய் வாருமையா
ஒடுங்கிப்போன எங்கள் ஆவியை விரட்டி
உற்சாகம் தாருமையா