Skip to main content

புத்தம் புதிய பாடல் தந்தார் நித்தம் அவரைத் துதித்திடவே


புத்தம் புதிய பாடல் தந்தார்
நித்தம் அவரைத் துதித்திடவே

காலையில் கூவிடும் பறவைகளும்
மாலையில் கூப்பிடும் விலங்குகளும்
இன்பமாய் இயேசுவைத் துதிக்கின்றன
என்னையும் துதித்திட அழைக்கின்றன - புத்தம்

மரங்களில் மோதிடும் தென்றல் காற்றும்
பாறையில் மோதிடும் கடலலையும்
துள்ளியே களிப்புடன் துதிக்கின்றன
என்னையும் துதித்திட அழைக்கின்றன - புத்தம்

காகங்கள் கரைந்திடும் குரலைக் கேட்டு
படைத்தவர் மகிழ்ந்திடும் வேளையிலே
பாவி என் பாடலின் துதிகேட்டு
என் தேவன் களித்திட மகிழுவேன் நான் - புத்தம்

உள்ளத்தில் பாவங்கள் இருக்கும் வரை
உண்மையாய் துதித்திட முடியவில்லை
கல்வாரி இரத்தத்தால் கழுவப் பெற்றேன்
இன்பமாய் இயேசுவைத் துதித்து வாழ்வேன் - புத்தம்