Skip to main content

போற்றித் துதிப்போம் எம் தேவ தேவனை புதிய கிருபையுடனே


போற்றித் துதிப்போம் எம் தேவ தேவனை
புதிய கிருபையுடனே
நேற்றும், இன்றும், என்றும் மாறா
ஏசுவை நாமென்றும் பாடித் துதிப்போம்
இயேசுவென்னும் - நாமமே என்
ஆத்துமாவின் கீதமே - என் நேசரேசுவை நான்
என்றும் போற்றி மகிழ்ந்திடுவேன்

கோர பயங்கரமான புயலில்
கொடிய அலையின் மத்தியில்
காக்கும் கரங்கொண்டு மார்பில் சேர்த்தணைத்த
அன்பை என்றும் பாடுவேன் - இயேசு

யோர்தான் நதிபோன்ற சோதனையிலும்
சோர்ந்தமிழ்ந்து மாளாதே
ஆர்ப்பின் ஜெயத் தொனியோடே
பாதுகாத்த அன்பை என்றும் பாடுவேன் - இயேசு

தாய் தன் பாலகனையே மறப்பினும்
நான் மறவேன் என்றும் சொன்னதால்
தாழ்த்தி என்னையவர் கையில் ஈந்து
ஜீவ பாதை என்றும் ஓடுவேன் - இயேசு

பூமியகிலமும் சாட்சியாகவே
போங்களென்ற கட்டளையதால்
ஆவி ஆத்துமாவும், தேகம் யாவும் இன்று
ஈந்து தொண்டு செய்குவேன் - இயேசு