Skip to main content

பேரின்பம் பொங்கிட நேசரின் அன்பிதை போற்றிப் பாடிடுவேன்


பேரின்பம் பொங்கிட நேசரின் அன்பிதை
போற்றிப் பாடிடுவேன்
இயேசுவின் அன்பு இணையற்றதே
அல்லேலூயா! அல்லேலூயா!

தந்தையும் தாயும் கைவிடினும்
தள்ளிடாமல் என்னை அரவணைப்பீர்
இயேசுவின் அன்பு என் உள்ளம் பொங்குதே
என்ன பாக்கியம் - பேரின்

பாவத்தில் மாண்டோர் ஜீவன் பெற
பாரினில் பலியாய் ஜீவனீந்தார்
தேவ குமாரன் தியாகத்தினாலே
தேவன்பு வெளியிடப்பட்டதே - பேரின்

பரிசுத்த ஆவியால் இருதயத்தில்
பரமனின் அன்பினை ஊற்றினாரே
ஜீவனானாலும் மரணமானாலும்
தேவனில் நிலைத்திருப்பேன் - பேரின்

சோதனை வியாதி வந்திடினும்
வேதனை யாவும் நீக்கிடுவார்
என்னென்ன துன்பம் இனியும் வந்தாலும்
அன்பரால் ஜெயங்கொள்ளுவேன் - பேரின்

அன்பென்னும் கட்டினால் இணைந்திடுவோம்
ஆவியின் ஒருமையை காத்திடுவோம்
அவர் வரும் வேளையில் அவரைப் போலிருக்க
ஆயத்தமாகிடுவோம் - பேரின்