Skip to main content

பாவியாயிருக்கையில் நேசரே! எனக்காய் மரித்தீர் பாவ வாழ்வினின்று இயேசுவே நேசித்துப் பிரித்தீர்


பாவியாயிருக்கையில் நேசரே! எனக்காய் மரித்தீர்
பாவ வாழ்வினின்று இயேசுவே நேசித்துப் பிரித்தீர்
பரதேசி போலவே அலைந்திட்ட எனக்காய்
பரனேசுவே நீர் உயிர் கொடுத்தீர்

தாயின் கர்ப்பத்தில் தெரிந்துக் கொண்டீர்
கண்மணி போலவே காத்து வந்தீர்
தாயினும் மேலாய் அன்பு கூர்ந்தீர்
தகப்பனே என்னை தூக்கி சுமந்தீர்

கல்வாரி வரையென்னை அழைத்துச் சென்றீர்
சொந்த ரத்தத்தால் சுத்திகரித்தீர்
பாவத்தை சாபத்தை முற்றும் அழித்தீர்
பரிகாரியே! என்னில் அன்பை பொழிந்தீர்

குற்றங்கள் காண்கையில் பெற்றோh வெறுத்தாh
சுற்றத்தார் நண்பர்கள் முற்றும் பகைத்தார்
நீர் மட்டும் என்னை விட்டு விலக வில்லை
நீசப் பாவி என்னை வெறுக்கவில்லை