Skip to main content

பாடுவேனே வாழ்விலே என் ஆசை நேசரைக் கண்டேனே


பாடுவேனே வாழ்விலே என்
ஆசை நேசரைக் கண்டேனே

சுந்தர மைந்தன் கிறிஸ்து என்ற நாமமே
நிந்தை கோலம் பூண்ட பாலன்
வேந்தன் இயேசுவே

எல்லையில்லாக் கிருபை நிறைந்த ஜீவ ஊற்றாமே
அல்லல் தீர்க்கும் அன்பின் வள்ளல்
எல்லா நாளுமே

இவ்வுலகில் உள்ள பொருள் யாவும் நீங்குமே
எந்தன் ஆசை உந்தன் வீடே
என்றும் வாழ்வேனே

துன்பம் துக்கம் தொல்லை யாவும்ட என்னை மூடினும்
அன்பரென்னை இன்ப வீட்டில்
கொண்டு சேர்ப்பாரே

என்னை ஆண்ட நேசத்துக்கு என்ன ஈடுண்டோ
என்ன செய்வேன் ஒன்றுலீல்லை
என்னையே தந்தேன்

எக்காளம் தொனித்திடவே காலமாயிற்றே
மேக மீதில் ஜீவ நாதன்
வேகம் வாராரே