Skip to main content

பிரதான தூதன் எக்காளம் முழங்க பரமன் இயேசு வருவார்


பிரதான தூதன் எக்காளம் முழங்க
பரமன் இயேசு வருவார்

அனுபல்லவி
சாயங்காலத்திலோ நடுராவினிலோ
சேவல் கூவிடும் நேரத்திலோ
அதிகாலையிலோ எந்த வேளையிலோ
பரமன் இயnசு வருவார்

இருவர் வயலில் இருப்பார்
இரண்டு ஸ்திரீகள் எந்திரம் அரைப்பார்
ஒருவர் கைவிடப்படுவார்
ஏற்றுக் கொள்ளப்படுவார் ஒருவர் - சாயங்

நோவா காலத்தின் சம்பவம் போல்
நடந்திடும் அந்த நாட்களில்
புசித்தும் குடித்தும் பெண் கொண்டும்
பலர் அசந்து வெரித்திருப்பார் - சாயங்

வௌகீகக் கவலைகளினாலும்
இலச்சை மிகுந்த வெரியினாலும்
எம் இதயம் பாரம் அடையாமல்
எச்சரிச்கையுடன் காத்திருப்போம் - சாயங்

இரவும் பகலும் விழிப்பாய்
இருதயம் நொறுங்கி ஜெபிப்போம்
கற்புள்ள கன்னிகையாக நாமும்
கர்த்தர் வருகைக்குக் காத்திருப்போம் - சாயங்

தவிக்கும் உலகம் அந்த நாளில்
தலைகளை உயர்த்தி நடப்போம்
வருகை நெருங்க கர்த்தர் இயேசு
வாசற்படியில் வந்து நிற்கிறார் - சாயங்