Skip to main content

பல்லவி நன்றியால் பொங்குதே எமதுள்ளம்


பல்லவி
நன்றியால் பொங்குதே எமதுள்ளம்
நாதன் செய் பல நம்மைகட்காய்
நாடோறும் நலமுடன் காத்தனரே
நன்றியால் Þதோத்தரிப்போம் அல்லேலூயா

கடந்த வாழ் நாளில் கருத்துடனே
கண்மணிப் போல் நம்மை காத்தனரே
கண்ணீர் கவலையினை மாற்றினாரே
கனிவுடன் Þதோத்தரிப்போம் அல்லேலூயா - நன்றியால்

ஜீவன் சுகம் பெலன் யாவும் தந்து
ஜீவிய பாதையில் நடத்தினாரே
ஜீவ கால மெல்லாம் Þதோத்தரிபோம்
ஜீவனின் அதிபதியை அல்லேலூயா - நன்றியால்

அற்புத கரம் கொண்டு நடத்தினாரே
அதிசயங்கள் பல புரிந்தனரே
ஆயிரம் நாவுகள்தான் போதுமோ
ஆண்டவih துதிக்க அல்லேலூயா - நன்றியால்

பாவ சேற்றினில் அமிழ்த நம்மை
பாச கரம் கொண்டு தூக்கினாரே
கன்மலைமேல் நம்மை நிறுத்தி அவர்
கருத்துடன் காத்தனரே அல்லேலூயா - நன்றியால்