Skip to main content

பெலமுள்ள நகரமாம் இயேசுவண்டை பயமின்றி ஓடி நீ வந்திடுவாய்


பெலமுள்ள நகரமாம் இயேசுவண்டை
பயமின்றி ஓடி நீ வந்திடுவாய்
சஞ்சலத்திற்கொரு வழியில்லையே
சந்ததம் அவர் நம்மைக் காத்துக் கொள்வார்

நிலையில்லா உலகத்தின் அலைகளாலே
அலைந்திடும் பயனென்ன புதல்வனே நீ
விசுவாசக் கப்பலிலே க்ஷேமமாக
யாத்திரை செய்பவர்க்கு லோகம் வேண்டாம்

கழுகு போல் பறந்து நீ உன்னதத்தில்
வாழ்கின்ற ஜீவியம் வாஞ்சித்துக் கொள்
காத்திருந்திடுகில் ஈந்திடுவார்
பெருக்கமுள்ள பெலன் மக்களுக்கு

மரணம் தான் வருகிலும் பயப்படாதே
விரைந்துன்னை கர்த்தர் தாம் காத்திடுவார்
யாதொன்றும் உன்னைப் பயப்படுத்த
எங்குமில்லையென்று விசுவாசிப்பாய்

ஆறுதலடையும் அந்நாடு சென்று
இயேசுவின் மார்பில் நாம் ஆனந்திப்போம்
பரம சுகம் தரும் ஊற்றுகளில்
பரனோடு நித்தியம் பானம் செய்வேன்