Skip to main content

பூமியின் குடிகளே புதுப்பாட்டினை பாடுங்கள் கர்த்தரின் நாமத்தை கருத்துடன் பாடுங்கள்


பூமியின் குடிகளே புதுப்பாட்டினை பாடுங்கள்
கர்த்தரின் நாமத்தை கருத்துடன் பாடுங்கள்
இரட்ச்சிப்பின் செய்தியை நாளுக்கு நாளும் சொல்லுங்கள்
கர்த்தரின் மகிமையை ஜாதிகளுக்கு சொல்லுங்கள்

பெரியவரே நம் கர்த்தரே
ஸ்தோத்தரிக்கப்படத்தக்கவர்
பயப்படத்தக்கவரே அவர்
வனாதி வானத்தைப் படைத்தவர்

மகிமையும் கனமும் அவருக்கே
வல்லமை மகத்துவம் அவரதே
காணிக்கையோடும் மகிமையை
அவருக்கு என்றும் செலுத்துங்கள்

பரிசுத்த அலங்காரத்துடன்
கர்த்தரை தொழுது கொள்ளுங்கள்
பூமியின் குடிகளே யாவரும்
கர்த்தர் முன்பாக நடுங்குங்கள்

வானமும் பூமியும் எழும்பட்டும்
சமுத்திர அலைகளும் முழங்கட்டும்
விருட்சங்களெல்லாம் பாடட்டும்
நாடும் களிகூர்ந்து மகிழட்டும்

ஆண்டவர் சீக்கிரம் வருகிறார்
பூமியை நியாயம் தீர்க்க வருகிறார்
பரிசுத்தவான்களும் ஆயத்தம்
ராஜாதி ராஜா வருகிறார்