Skip to main content

இன்ப இயேசு என்னை என்றும் நடத்துவார் அவர் இனிய மார்பில் சாய்ந்திடுவேனே


இன்ப இயேசு என்னை என்றும் நடத்துவார்
அவர் இனிய மார்பில் சாய்ந்திடுவேனே

காரிருள் மூடும் வேளையில்
கண்ணீரின் சோக பாதையில்
இனிய வேத வாக்கில் என்னை தேற்றுவார்
இன்ப மோட்ச வீட்டில் என்னை சேர்த்திடவே - இன்ப

யுத்தம் என்னை எதிர்க்கும் போதும்
யோர்தான் நதி புரளும் போதும்
சோர்ந்திடாமல் பெலனை தந்து காத்திடுவார்
சேனைகளின் கர்த்தர் யுத்தம் செய்வாரே - இன்ப

பஞ்சம் பசியும் நெருக்கம் வந்தாலும்
அஞ்சிடாமல் அவரை சார்வேனே
தஞ்சம் தந்து தாங்கும் அன்பரே
கெஞ்சும் ஏழை ஜெபம் கேட்பீரே - இன்ப

சோதனையில் தாங்கும் நாயகா
சேனையதிபன் இயேசு இரட்சகா
வேதனைகள் நீங்கும் பெலன் தருவீரே
நாதன் வரவில் நான் மகிழ்ந்து பாடவே - இன்ப