Skip to main content

இயேசுவை நம்பினோர் மாண்டதில்லை என்னென்ன துன்பங்கள் நேரிட்டாலும்


இயேசுவை நம்பினோர் மாண்டதில்லை
என்னென்ன துன்பங்கள் நேரிட்டாலும்
சிங்கத்தின் வாயினின்று இரட்சிப்பார்
பங்கம் வராதென்னை ஆதரிப்பார்
நெஞ்சமே நீ அஞ்சிடாதே
நம்பினோரை கிருபை சூழ்ந்திடுதே
இம்மட்டும் காத்தவர் இம்மானுவேல்
இன்னமும் காத்துன்னை நடத்துவார்

நாசியில் சுவாசமுள்ள மாந்தரை
நம்புவதல்ல தம் ஆலோசனை
கோர பயங்கர காற்றடித்தும்
கன்மலைமேல் கட்டும் வீடு நிற்கும் - நெஞ்

விசுவாசத்தால் நீதிமான் பிழைப்பான்
வறட்சி மிகுந்த காலத்திலும்
பக்தன் வலது பாரிசத்திலே
கர்த்தர் தாம் நிற்பதால் அசைந்திடான் - நெஞ்

இயேசுவின் நாமத்தில் ஜெயம் பெற்றே
ஏகிப் பறந்திடும் பக்தரோடே
சேர்ந்தென்றும் வாழ்ந்திடும் ஐக்கியத்திலே
ஜெய கெம்பீரமே உனக்குண்டே - நெஞ்

ஏழை உன் ஆத்துமா பாதாளத்தில்
என்றம் அழிந்திட விட்டுவிடார்
தம் சமூகம் நித்திய பேரின்பமே
சம்பூர்ண ஆனந்தம் பொங்கிடுமே - நெஞ்

அங்கே அநேக வாசஸ்தலங்கள்
அன்பின் பிதா வீட்டில் ஜொலிக்குதே
நேர்த்தியான இடங்களில் உந்தன்
நித்திய பங்கு கிடைத்திடுமே - நெஞ்