Skip to main content

இயேசுவே எந்தன் போஜனம் இயேசுவே எந்தன் ஜீவ மன்னா


இயேசுவே எந்தன் போஜனம்
இயேசுவே எந்தன் ஜீவ மன்னா
இயேசுவே எந்தன் ஜீவ அப்பம்
தாகத்தைத் தீர்த்திடும் ஜீவநதி

பாவக் கொடுமையால் நாவறண்டபோது
பார்த்து கசிந்து உள்ளம் நொறுங்கி - 2
கல்வாரி சிலுவையில் தன்னைப் பிழிந்தார்
இரத்தத்தைப் பருக பானமாய் தந்தார் - இயேசுவே

தாயென்னை மறந்து தள்ளினபோது
தகப்பன் வெறுத்து பகைத்த போதும் - 2
ஆணிகள் பாய்ந்த கரங்கள் கொண்டு
ஆழாதே நானுண்டெனக் கண்ணீர் துடைத்தார் - இயேசுவே

உள்ளத்தின் வேதனை மிஞ்சிடும் நேரம்
உண்மையாய் அணைக்கும் அன்பரின் கரம் - 2
பக்கமாய் நின்று தேற்றிடுவாரே
பரிதபித் தன்பாய் வேண்டிடுவாரே - இயேசுவே

அன்புக்கு ஏங்கின அனாதை எனக்கு
அன்பர் என் இயேசுவே எல்லாமு மானார் - 2
எனக்கும் நீதான் எல்லாமுமென்றார்
தாயாய் தகப்பனாய் நண்பனாய் ஆனார் - இயேசுவே