Skip to main content

இயேசுவை நம்பிப் பற்றிக் கொண்டேன் மாட்சிமையான மீட்பைப் பெற்றேன்


இயேசுவை நம்பிப் பற்றிக் கொண்டேன்
மாட்சிமையான மீட்பைப் பெற்றேன்
தேவ குமாரன் இரட்சை செய்தார்
பாவியாம் என்னை ஏற்றுக் கொண்டார்
இயேசுவைப் பாடிப் போற்றுகிறேன்
நேசரைப் பார்த்துப் பூரிக்கிறேன்
மீட்பரை நம்பி நேசிக்கிறேன்
நீடூழி காலம் ஸ்தோத்தரிப்பேன்

அன்பு பாராட்டிக் காப்பவராய்
எந்தனைத் தாங்கி பூரணமாய்
இன்பமும் நித்தம் ஊட்டுகிறார்
இன்னும் நீங்காமல் பாதுகாப்பார் - இயேசுவை

மெய்ச் சமாதானம் ரம்மியமும்
துய்ய தேவாவி வல்லமையும்
புண்ணிய நாதர் தந்துவிட்டார்
விண்ணிலும் சேர்ந்து வாழச் செய்வார் - இயேசுவை