Skip to main content

இரட்சா பெருமானே பாரும் புண்ணிய பாதம் அண்டினோம்


இரட்சா பெருமானே பாரும்
புண்ணிய பாதம் அண்டினோம்
சுத்தமாக்கிச் சீரைத்தாரும்
தேடி வந்து நிற்கிறோம்
இயேசு நாதா இயேசு நாதா
உந்தன் சொந்தமாயினோம்

மேய்பன் மேல் முந்திச் சென்றும்
பாதுகாத்தும் வருவீர்
ஜீவத் தண்ணீரண்டை என்றும்
இளைப்பாறச் செய்குவீர்
இயேசு நாதா இயேசு நாதா
மேய்ச்சல் காட்டிப் போஷிப்பீர்

நீதிப் பாதை தவறாமல்
நேசமாய் நடத்துவீர்
மோசம் பயமுமில்லாமல்
தங்கச் செய்து தாங்குவீர்
இயேசு நாதா இயேசு நாதா
ஒரு போதும் கைவிடீர்

ஜீவ கால பரியந்தம்
மேய்த்தும் காத்தும் வருவீர்
பின்பு மோட்ச பேரானந்தம்
தந்து வாழச் செய்குவீர்
இயேசு நாதா இயேசு நாதா
ஊழி காலம் வாழ்விப்பீர்