Skip to main content

இன்ப கீதம் துன்ப நேரம் ஈந்தீரே என் இயேசுவே


இன்ப கீதம் துன்ப நேரம்
ஈந்தீரே என் இயேசுவே
கொல்கொதா பாதை சிலுவை சுமந்தே
கர்த்தாவே உம்மண்டை வந்தேன்

பெரு வெள்ளத்தில் புகலிடம் நீரே
பெரும் கன்மலை நிhலே
வீசிடும் கொண்டல் காற்றுக்கு ஒதுக்கே
வற்றாத நீரூற்றும் நீரே - இன்ப

ஊளையிடும் ஓர் பாழும் நிலத்தில்
ஊக்கமுடன் என்னைத் தேடி
கண்டு உணர்த்தி கை தாங்கி நடத்தி
கண்ணின் மனிபோலக் காத்தீர் - இன்ப

துஷ்ட மிரகம் என்னை எதிர்த்தும்
கஷ்டம் வராதென்னை காத்தீர்
மந்தையின் மேய்ப்பன் தாவீதின் தேவன்
கண்ணின் மணிபோலக் காத்தீர் - இன்ப

போராட்டமான போன வாழ்நாளில்
நீரோட்டம் மோதும் இன்னலில்
முற்று முடிய வெற்றி அளித்தீர்
குற்றம் குறை நீக்கிக் காத்தீர் - இன்ப

உந்தன் சரீர பெலவீன நேரம்
எந்தன் கிருபையே போதும்
என்று உரைத்து என்னை அணைத்து
எத்தனையோ நன்மை செய்தீர் - இன்ப

கல்வாரிப் பாதை தோல்வியில்லையே
கர்த்தாவே முன்னோடி நீரே
உம்பின் நடந்தே உம்மைத் தொடர்ந்தே
உன்னத வீட்டை அடைவேன் - இன்ப

அழைத்தவரே உண்மையுள்ளோரே
அப்படியே ஜெயம் ஈவார்
இயேசுவே உம்மால் ஜெயம் அருளும்
எங்கள் பிதாவுக்கு ஸ்தோத்திரம் - இன்ப