Skip to main content

இயேசுவே உந்தன் மாசில்லா இரத்தம் எந்தனுக்காக சிந்தினீரே - 2


இயேசுவே உந்தன் மாசில்லா இரத்தம்
எந்தனுக்காக சிந்தினீரே - 2
கோரப்பாடுகள் யாவும் சகித்தீர்
அத்தனையும் எனக்காகவோ

என் மேல் பாராட்டின உமதன்புக்
கீடாய் என்ன நான் செய்திடுவேன்
நரகாக்கினையின் நின்று மீட்ட
சுத்த கிருபையை நித்தம் பாடுவேன் - மா பாவி

எந்தன் பாவங்கள் பாரச் சுமை போல்
தாங்கக் கூடாத மா பாரமே
மன்னிக்கும் தயை பெருத்த என் தேவா
ஜீவ வார்த்தையால் தேற்றுகின்றீர் - மா பாவி

எந்தன் பாதங்கள் சறுக்கிடும் போது
வலக்கரத்தாலே தாங்குகின்றீர்
மன பாரத்தால் சோர்ந்திடும் போது
ஜீவ வார்த்தையால் தேற்றுகின்றீர் - மா பாவி

எனக்காக நீர் யாவும் முடித்தீர்
உமக்காக நான் என்ன செய்வேன்
எந்தன் ஜீவனுள்ள நாளெல்லாம் உம்
சிலுவை சுமந்து வருவேன் - மா பாவி