Skip to main content

இயேசுவை நம்பி விசுவாசிப்பவன் அவர் செய்த கிரியை தானும் செய்வான்


இயேசுவை நம்பி விசுவாசிப்பவன்
அவர் செய்த கிரியை தானும் செய்வான்
அதிலும் மேலாய் செய்திடுவான்
என்று நம் இயேசு கூறினாரே
மாற்றிடுவார் மாற்றிடுவார்
என்னையும் தம்மைபோல் மாற்றிடுவார்

தமது மாதிரி இயேசு தாமே
அவரின் சுவட்டை பின்பற்றுவோம்
நாதனின் நல்சிந்தை நிறைந்தோராய்
நானிலந்தனிலே வாழ்ந்திடுவோம் - மாற்றி

கிருபை ரட்சண்யம் சத்தியமும்
விசுவாசம் ஆவியின் வல்லமையும்
வல்ல நல் ஆவியின் கனிகளும்
அவர் போல வாழச் செய்திடுமே - மாற்றி

இயேசுவே மெய்யான திராட்சை செடி
அவரில் நிலைத்தால் கனி கொடுப்பாய்
கனி கொடுக்கும் கொடி எதுவோ
அதிகம் கொடுக்க சுத்தம் செய்வார் - மாற்றி

தேவ எக்காளம் முழங்கிடவே
ஆரவாரத்தோடே தோன்றிடுவார்
ஆயிரம் ஆயிரம் சுத்தருடன்
மறு ரூபமாகி ஏகிடுவோம் - மாற்றி