Skip to main content

இயேசுவே வழி சத்தியம் ஜீவன் இயேசுவே ஒளி நித்யம் தேவன் - (2)


இயேசுவே வழி சத்தியம் ஜீவன்
இயேசுவே ஒளி நித்யம் தேவன் - (2)

புதுவாழ்வு எனக்கு தந்தார்
சமாதானம் நிறைவாய் அளித்தார்
பாவங்கள் யாவும் மன்னித்தார்
சாபங்கள் யாவும் தொலைத்தார்
கல்வாரி மீதில் எனக்காய்
தம் உதிரம் சிந்தி மரித்தார்
மூன்றாம் நாளில் உயிர்த்தார்
உன்னதத்தில் அமர்ந்தார் - இயேசுவே

நல்மேய்ப்பனாகக் காத்தார்
என்னை தமயனாகக் கொண்டார்
என் நண்பனாக வந்தார்
என் தலைவனாக நின்றார்
மேகங்கள் மீதில் ஓர் நாள்
மணவாளனாக வருவார்
என்னை அணைத்துக் கொள்வார்
வானில் கொண்டுசெல்வார் - இயேசுவே

உனக்காகத்தானே பிறந்தார்
உனக்காகத்தானே வளர்ந்தார்
உனக்காகத்தானே மரித்தார்
உனக்காகத்தானே உயிர்த்தார்
இன்றும் என்றும் நமக்காய்
அவர் ராஜனாக இருப்பார்
மார்பில் என்றும் அணைப்பார்
தூக்கி உன்னை சுமப்பார் - இயேசுவே