Skip to main content

தாங்கி நடத்தும் தேவகிருபை எத்தனை ஆச்சரியம் - அதை


தாங்கி நடத்தும் தேவகிருபை
எத்தனை ஆச்சரியம் - அதை
சார்ந்து சார்ந்து அனுதினமும்
மகிழ்ந்து வழுகிறேன் - (2)
அல்லேலூயா அவர் வல்ல நாமத்தை
என்றென்றும் துதித்திடுவேன் ஆஹா ஆஹா - (2)

துன்ப நேரத்தில் ஆறுதல் அளிக்கும்
இன்ப கிருபை இது
தொல்லை கவலையில் கண்ணீர் துடைக்கும்
அன்பின் கிருபையிது - (2) அல்லேலூயா

நேசிப்பவர் எல்லாம் தள்ளிவிட்டாலும்
நேசரின் கரம் தாங்கும்
நண்பர் உற்றாரிலும் உண்மையுள்ளோர் அவர்
நம்புவேன் அவரை நான்- (2) அல்லேலூயா

பஞ்சம் வந்திடினும் அஞ்சிடேனே நான்
தஞ்சம் என் இயேசு உண்டு
வானத்தின் அப்பம் அவரே என் மீட்பர்
புசித்து வாழ்ந்திருப்பேன் - (2) அல்லேலூயா