Skip to main content

துதியுங்கள் நம் தேவனை போற்றுங்கள் வல்லவரை


துதியுங்கள் நம் தேவனை
போற்றுங்கள் வல்லவரை
தூதர்கள் போற்றிடும் தூய தேவனை
பாடிடுவோம்

பாவ சேற்றில் இருந்த என்னை
பாசத்தால் அவர் இழுத்துக் கொண்டார்
பாரமான பாவசுமைதனையே
பரமன் நீக்கினார் - துதி

கடந்த வாழ்நாளில் கர்த்தர் என்னை
கண்மணி போல பாதுகாத்தார்
காலமெல்லாம் உம்மை நினைத்திடுவோம்
கருத்தாய்ப் பாடுவோம் - துதி

தாயின் கருவில் இருந்த என்னை
தள்ளிடாமல் எடுத்தணைத்தார்
தாகம் தீர ஜீவ தண்ணீரையும்
தயவாய் தந்திட்டார் - துதி