Skip to main content

தொல்லைக் கஷ்டங்கள் சூழ்ந்திடும் துன்பம் துக்கம் வரும்


தொல்லைக் கஷ்டங்கள் சூழ்ந்திடும்
துன்பம் துக்கம் வரும்
இன்பத்தில் துன்பம் நேர்ந்திடும்
இருளாய் தோன்றும் எங்கும்
சோதனை வரும் வேளையில்
சொற்கேட்கும் செவியிலே
பரத்திலிருந்து ஜெயம் வரும்
பரன் உன்னை காக்க வல்லோர்
காக்கும் வல்ல மீட்பர் உண்டெனக்கு - 3
காத்திடுவார் என்றுமே

ஐயம் மிகுந்ததோர்காலத்தில்
ஆவிக் குறைந்ததால்
மீட்பர் உதிர பலத்தால்
சத்துருவை வென்றேன்
என்பயம் யாவும் நீங்கிற்றே
இயேசு கைதூக்கினார்
முற்றும் என்னுள்ளம் மாறிற்று
இயேசென்னைக் காக்க வல்லோர்

என்ன வந்தாலும் நம்புவேன்
என் நேச மீட்பரை
யார் கைவிட்டாலும் பின் செல்வேன்
எனது இயேசுவை
அகல ஆழ உயரமாய்
எவ்வளவு அன்புகூர்ந்தார்
என்ன துன்பங்கள் வந்தாலும் அவர்
என்னைக் கைவிடமாட்டார்