Skip to main content

தேவனே! பிரசன்னமாகி ஜீவன் ஊதி உயிர்ப்பியும்


தேவனே! பிரசன்னமாகி
ஜீவன் ஊதி உயிர்ப்பியும்
ஆசை காட்டும் தாசர் மீதில்
ஆசீர் வாதம் ஊற்றுவீர்
அருள்மாரி எங்கள் பேரில்
வருஷிக்கப் பண்ணுவீர்;
ஆசையோடு நிற்கிறோமே
ஆசீர்வாதம் ஊற்றிடும்

தேவரீரின் பாதத்தண்டை
ஆவலோடே கூடினோம்;
உந்தன் திவ்விய அபிஷேகம்
நம்பி நாடி அண்டினோம் - அருள்மாரி

ஆண்டவர் மெய்ப்பக்தர் செய்யும்
வேண்டுகோளைக் கேட்கிறீர்
அன்பின் ஜீவாலை எங்கள் நெஞ்சில்
இன்று மூட்டி நிற்கிறீர் - அருள்மாரி

தாசர் தேடும் அபிஷேகம்
இயேசுவே; கடாட்சியும்
பெந்தே கோஸ்தின் திவ்விய ஈவை
தந்து ஆசீர்வதியும் - அருள்மாரி