Skip to main content

துதிப்போம் அல்லேலூயா பாடி மகிழ்வோம் மகிபனைப் போற்றி


துதிப்போம் அல்லேலூயா பாடி
மகிழ்வோம் மகிபனைப் போற்றி
மகிமை தேவ மகிமை
தேவ தேவனுக்கே மகிமை

தேவன் நம்மை வந்தடைய செய்தார்,
தம்மை என்றும் அதற்காகத் தந்தார்,
அற்புதங்கள் செய்யும் சர்வல்ல தேவன்
அடைக்கலம் கொடுத்திடுவார். - துதிப்போம்

தேவன் எந்தன் அடைக்கலமாமே
ஒரு போதும் பொல்லாப்பு வராதே
சர்வல்ல தேவன் தாபரமாய் நின்றே
விடுவித்து காத்திடுவார் - துதிப்போம்

கூப்பிடும் வேளையில் என்னை
தப்புவிக்க சீக்கிரமாய் வந்தார்
சிங்கத்தின் மேலே நடத்திடுவேனே
சர்ப்பங்களை மிதித்திடுவேன் - துதிப்போம்

பாதம் கல்லில் என்றும் இடறாமல்
கரங்களில் தாங்கிடுவார் தூதர்
ஒருபோதும் வாதை என் கூடாரத்தை
அணுகாமல் காத்திடுவார் - துதிப்போம்

அஞ்சிடேனே இருளிலே என்றும்
நடமாடும் கொள்ளை நோயைக் கண்டும்
பயங்கரத்திற்கும் பறக்கும் அம்பிற்கும்
பயந்திடேன் ஜெயித்திடுவேன் - துதிப்போம்