Skip to main content

துதிகள் செலுத்துவேன் தூய வாழ்க்கை தந்ததால்


துதிகள் செலுத்துவேன்
தூய வாழ்க்கை தந்ததால்
அதிசயமாகவே என்னை
ஆட்கொண்டீர் இயேசுவே

கரை காணா என் வாழ்க்கையில்
கரை சேர்க்க வந்தீரையா
இருளான என் பாதையில்
ஒளியாக வந்தீரையா
அருள்தாரும் என் இயேசு ராஜா
திருக்கரத்தால் தாங்கி இனியும் - துதிகள்

மனுபாவங்கள் போக்கவே
மனுகோலம் கொண்டீரையா
அனுகூல வாழ்வைத் தரவே
என்னை ஆதரித்தீரையா
தினந்தோறும் என் தியானம் நீரே
கன மகிமை யாவும் உமக்கே - துதிகள்