Skip to main content

துதி செய் நீ மனமே துதிகளை பாடியே


துதி செய் நீ மனமே
துதிகளை பாடியே
துதி பெற பாத்திரராய்
தூயவர் ஏசுவே

பரலோக மகிமை துறந்தவரே
பாவ இவ்வுலகில் வந்தவரே
பரிசுத்தராகவே வாழ்ந்தவரே
பாவியை மீட்கவே வந்தவரே - துதி

கருணையின் உள்ளம் படைத்தவரே
குற்றங்கள் யாவையும் சுமந்தவரே
குரசினில் எனக்காய் மரித்தவரே
குரதியை சிந்தி மீட்டவரே - துதி

இயேசுவை அன்றி வேறொருவர்
காசினில் உண்டோ சொல் மனமே
நேசரின் அன்பை என்றும் உணர்ந்து
தாசரும் அவர் பாதத்தில் விழுந்து - துதி

மானிடர் எல்லாம் விட்டோடினும்
மாசற்ற தேவன் நம்மோடிருப்பார்
ஆர்ப்பரித்தே என்றுமே மகிழ்வேன்
ஆண்டாண்டு காலம் நம்மை காப்பதால் - துதி

தாவீதின் வேராய் வந்தவரே
தாசர்கள் உள்ளத்தில் நிறைந்தவரே
உள்ளத்தை தூய்மையாய் மாற்றவாரே
பரிசுத்த பங்கை தந்தவரே - துதி

நேசரின் மார்பினில் சார்ந்திடுவேன்
நேசத்தால் நம்மை நிரப்பிடுவார்
நாசம் என்றும் நம்மை அணுகாமலே
ஆதரித்து என்றும் காத்திடுவார் - துதி

நேசரின் வருகை நெருங்கிடுதே
நாச லோகை விட்டு சென்றிடுவேன்
எக்காள சத்தம் தொனித்திடுமே
மத்திய ஆகாயத்தை சேருவோம் - துதி