Skip to main content

துதித்திடுவேன் தூயவர் இயேசுவை தூய ஆவியால் நிறைந்து மகிழ்ந்து


துதித்திடுவேன் தூயவர் இயேசுவை
தூய ஆவியால் நிறைந்து மகிழ்ந்து
துதித்துப் போற்றிடுவேன்

அக்கினி சோதனை அலை மோதும் போதும்
உம்மாலே சேனைக்குள் பாய்ந்திடுவேன்
உம்மாலே மதிலைத் தாண்டி சென்றிட
பெலனும் ஈந்திரே - உம்மை
போற்றாமல் துதியாமல் இருப்பேனோ 2-துதி

முன்னும் பின்னும் உம்வழியை
அறியாமல் திகைக்கும் வேளையில்
செம்மையான பாதையில் நடக்க
வழியையும் காட்டினீரே - உம்மைப்
போற்றாமல் துதியாமல் இருப்பேனோ?

பெருவெள்ளம் சீறி மோதுகையில்
பெரு கன்மலையின் நிழலுமானீர்
உறுதியாய் உம்மில் நிலைத்து நிற்க
உறைவிடம் அளித்தீரே - உம்மை
போற்றாமல் துதியாமல் இருப்பேனோ

யோர்தான் போன்ற சோதனைகள்
பிரவாகித்து வரும் வேளையிலே
மனம் பதாறாமல் நிலைத்து நின்று
கனி தரச் செய்தீரே - உம்மைப்
போற்றாமல் துதியாமல் இருப்பேனோ