Skip to main content

துதி கீதங்களால் புகழ்வேன் உந்தன் நாம மகத்வங்களை


துதி கீதங்களால் புகழ்வேன்
உந்தன் நாம மகத்வங்களை
இயேசுவே இரட்சகா
உந்தன் நாமம் எங்கள் ஆறுதல்
சரணங்கள்

தினந்தோறும் உம் தானங்சளால்
நிறைத்திடுமே எங்களை நீர்
திரு உள்ளமது போல் எமை மாற்றிடுமே
கனிவோ டெங்களை உந்தன் காருண்யத்தால் - துதி

அலைமோதும் இவ்வாழ்க்கையிலே
அனுகூலங்கள் மாறும்போது
வழிகாட்டிடுமே துணை செய்திடுமே
கனிவோ டடியார்களை காருண்யத்தால் - துதி

உம்மை துதிக்கும் வேளையிலே
ஊக்கம் அளித்த கிருபையல்லோ
உந்தன் சித்தம் என்னில் நிறைவேறிடவே
என்னை முற்றுமாக இன்று அர்ப்பணித்தேன் - துதி

வானம் பூமியை படைத்தவரே
வாரும் என்றே அழைக்கின்றோமே
என்று வந்திடுவீர் ஆவல் தீர்ந்திடுமே
கனிவோ டெங்களை உந்தன் காருண்யத்தால் - துதி