Skip to main content

தியங்கும் உள்ளம் கண்டார் தயக்கம் என்ன என்றார்


தியங்கும் உள்ளம் கண்டார்
தயக்கம் என்ன என்றார்
திகைக்கும் என் மனதில்
திருவார்த்தை அருளித் தந்தார்

துதிப்பேன் என் கர்த்தரை
துதிசாற்றி மகிழ்ந்திடுவேன்
என்னைக் கண்டு மனதுருகும்
அன்பர் இயேசு அருகில் உண்டே

கதறும் ஆத்துமாவே
கலங்காதே என்றவரே
கலைமான்களும் கதறி அழும்
நீரோடை வாஞ்சிப்பதால்

அவர் எந்தன் கன்மலையே
அசையாத நல் பர்வதமே
அரும்பாவ உலகமதில்
அவர் அன்பதில் மறைந்திடுவேன்