Skip to main content

திவ்வியயெக்காள சத்தம் கேட்க இயேசு தோன்றும் காலத்திலே ஆவலாய் அக்காட்சி கண்டானந்திப்பேன்


திவ்வியயெக்காள சத்தம் கேட்க இயேசு தோன்றும் காலத்திலே
ஆவலாய் அக்காட்சி கண்டானந்திப்பேன்
மீட்கப்பட்ட தாசர் ஒன்று கூடி மோட்சலோகத்தில்
நிற்கும் போது நானும் கூடவே நிற்பேன்
தாசர் விண்ணில் ஒன்றுவடி
நிற்கும்போது நானும் கூடவே நிற்பேன்

நித்திரை செய்த பக்தர் உயிர்த்து வானமேறியேகுவார்
மீட்பர் மாண்பைக் கண்டு ஆரவாரிப்பேன்
விசுவாசிகள் எல்லாரும் விண்ணில் கூடி வாழுவார்
அந்த நாளில் நானும் கூடவே நிற்வேன் - தாசர்

இயேசு நாதரின் பேரன்பை எங்கும் கூறும்படிக்கே
சோர்வில்லாமல் வேலை செய்து ஜீவிப்பேன்
பின்பு தாசர் ஒன்றுகூட தேவ சந்நிதியிலே
நிற்கும் போது நானும் கூடவே நிற்பேன் - தாசர்