Skip to main content

என்னை அழைத்தவர் உண்மையுள்ளவர் அன்பின் வாக்குத் தத்தங்களை தந்தவர்


என்னை அழைத்தவர் உண்மையுள்ளவர்
அன்பின் வாக்குத் தத்தங்களை தந்தவர்
எந்தன் வழிகளில் என்னை காப்பவர்
என்றும் உன்னை நடத்திடுவார்

தடைகள் உன் பாதையிலே
பெருந்துன்ப வேளைகளில்
பதறாமல் இயேசுவை நம்பு
புதுப்பாதை திறந்திடுவார் - என்னை

நிறைவேற்றிடுவார் தன் நாமத்தினால்
செய்ய முடியாதவைகள் ஒன்றுலீல்லை
சிங்கக் கெபியிலும் அக்கினியிலும்
அவர் சமூகம் உள்ளதினால் - என்னை

கடல் அலைபோல் துயரங்கள்
தீரா வியாதியினால் உடல் தளர்ந்தாலும்
உந்தன் அருகில் இயேசு வருவார்
விசுவாசத்தால் அவரைத் தொடு - என்னை