Skip to main content

எனக்காய் யார் போவார்? ஶி பாடுகள் எனக்காய் யார் சகிப்பார்?


எனக்காய் யார் போவார்? ஶி பாடுகள்
எனக்காய் யார் சகிப்பார்?
திறப்பின் வாசலில் நிற்பவன் யார்?
என்றேசு அழைக்கின்றார் உன்னை
இன்றேசு அழைக்கின்றார்

புத்தியுள்ள கன்னிகை போல்
விழித்திடு விசுவாசியே
வல்லமை நீ பெற்றிடவே
ஜெபித்திடு விசுவாசியே - என்றும்
ஜெபித்திடு விசுவாசியே - எனக்காய்

புல்லுள்ள இடங்களிலே
மேய்ச்சல் காட்டிடுவார்
ஆத்துமாவை தினம் தேற்றி
ஆறுதல் படுத்திடுவார் - தினம் தினம்
ஆறுதல் படுத்திடுவார் - எனக்காய்

முதியோரே வாலிபரே
கர்த்தருக்காய் புறப்படுங்கள்
வருத்தப்பட்டு சுமை சுமப்போரை
அவரண்டை சேர்த்திடுங்கள் மேய்ப்பன்
அவரண்டை சேர்த்திடுங்கள் - எனக்காய்