Skip to main content

என்னை ஆட்கொண்ட இயேசு உம்மையாரென்று நானறிவேன்


என்னை ஆட்கொண்ட இயேசு
உம்மையாரென்று நானறிவேன்
உண்மை உள்ளவரே - என்றும் நன்மைகள்
செய்பவரே

மனிதர் தூற்றும் போது - உம்மில்
மகிழச் செய்பவரே
அதைத்தாங்கிட பெலன் கொடுத்து
தயவாய் அணைப்பவரே - என்னை

தனிமை வாட்டும் போது நல்
துணையாய் இருப்பவரே
உம் ஆவியினால் தேற்றி
அபிஷேகம் செய்பவரே - என்னை

வாழ்க்கை பயணத்திலே
மேகத் தூணாய் வருபவரே
உம் வார்த்தையின் திருவுணவால்
வளமாய் காப்பவரே - என்ணை