Skip to main content

எந்தன் நாவில் புதுப்பாட்டு எந்தன் இயேசு தருகிறார் - (2)


எந்தன் நாவில் புதுப்பாட்டு
எந்தன் இயேசு தருகிறார் - (2)
ஆனந்தம் கொள்ளுவேன் அவரை நான் பாடுவேன்
உயிருள்ள நாள் வரையில் -அல்லேலூயா - (2)

பாவ இருள் என்னை வந்து சூழ்ந்து கொள்கையில்
தேவனவர் தீபமாய் என்னைத் தேற்றினார் - எந்தன்

வாதை நோயும் வந்தபோது வேண்டல் கேட்டிட்டார்
பாதை காட்டி துன்பமெல்லாம் நீக்கி மீட்டிட்டார் - எந்தன்

சேற்றில் வீழ்ந்த என்னையவர் தூக்கியெடுத்தார்
நாற்றமெல்லாம் ஜீவரத்தம் கொண்டு மாற்றினார் - எந்தன்

தந்தை தாயும் நண்பருற்றார் யாவுமாகினார்
நிந்தை தாங்கி எங்குமவர் மேன்மை சொல்லுவேன் - எந்தன்

இவ்வுலகப் பாடு என்னை என்ன செய்திடும்
அவ்வுலக வாழ்வை காண காத்திருக்கிறேன் - எந்தன்