Skip to main content

எப்படிப்பாடுவேன் நான் என் இயேசு எனக்குச் செய்ததை


எப்படிப்பாடுவேன் நான்
என் இயேசு எனக்குச் செய்ததை
ஆயுள் முழுவதும் என் கர்த்தருக்காய்
ஆத்தும ஆதாயம் செய்வேன்

ஒருவழி அiயும்போது
புதுவழித் திறந்த தேவா
திறந்த வாசலை என் வாழ்க்கையில்
அடைக்காத ஆண்டவரல்லோ - எப்படி

எப்பக்கம் நெருக்கப்பட்டும்
ஒடுங்கி நான் போவதில்லை
அப்பனின் மார்பினில் சாய்ந்தென்றுமே
எப்போதும் பாடிடுவேன் - எப்படி

கடந்துவந்த பாதையில்
கண்மணிபோல் காத்திட்டீர்
கடுகளவும் குறை வைக்காமலே
அதிகமாய் ஆசீர்வதித்தீர் - எப்படி