Skip to main content

எத்தனை நன்மைகள் எனக்கு செய்தீர் எப்படி நன்றி சொல்வேன் நான் - 2


எத்தனை நன்மைகள் எனக்கு செய்தீர்
எப்படி நன்றி சொல்வேன் நான் - 2
நன்றி ராஜா... நன்றி ராஜா... 2

கரங்களைப்பிடித்து கண்மணி போல
காலமெல்லாம் காத்தீர் - எத்தனை

தாழ்மையில் இருந்தேன் தயவுடன் நினைத்தீர்
தேவனே உம்மை துதிப்பேன் - எத்தனை

பெவீனன் என்று தள்ளிவிடாமல்
பெலத்தால் இடைகட்டினீர் - எத்தனை

பாவத்தினாலே மரித்துப்போய் இந்தேன்
கிருபையால் இரட்சித்தீரே - எத்தனை

பாவங்கள் போக்கி சாபங்கள் நீக்கி
பூரண சுகமாக்கினீர் - எத்தனை

முள் முடி தாங்கி திரு ரத்தம் சிந்தி
சாத்தானை ஜெயித்து விட்டீர் - எத்தனை

நீர் செய்த அதிசயம் ஆயிரம் உண்டு
விவரிக்க முடியாதையா - எத்தனை

எனக்காக மரித்தீர், எனக்காக உயிர்த்தீர்
எனக்காய் மீண்டும் வருவீர் - எத்தனை