Skip to main content

என் ஜீவ பயணத்திலே தேவா உம் பாதமே சரணம்


என் ஜீவ பயணத்திலே தேவா
உம் பாதமே சரணம்
பூலோக மீதினில் நீரேயல்லால்
யாரும் துணையில்லையே

மண்ணுலக பாவ இன்பங்களும்
மாயமாய் மறைந்திடுமே
மாறா உம் வாக்குகள் அனைத்துமே
நான் நம்பி பின் தொடர்வேன் - என்

பலவித சோதனை கஷ்டங்களும்
பலமாய் அணுகிடினும்
கலங்கின எந்தன் இருதயத்தை
அசையாமல் காத்திடுவீர் - என்

உந்தன் திவ்விய சந்நிதியிலே
பரிபூரண சந்தோஷமே
உம் திரு கரங்களின் தழும்பெனக்கு
நித்திய ஆரோக்கியமே - என்

உம்மில் என் சந்தோஷத்தை நினைத்தே
நிந்தைகள் சகித்திடுவேன்
உந்தன் சிலுவையை நான் சுமக்க
உம் கிருபை ஈந்திடுமே - என்

சீயோனின் சிந்தையை நான் எப்போதும்
தரித்திட எனை நடத்தும்
மகிமையில் உம்மோடு நான் நிற்கவே
தேவா தயை செய்குவீர் - என்