Skip to main content

எந்தன் கண்மணியே உந்தன் கவலைகளை


எந்தன் கண்மணியே
உந்தன் கவலைகளை
எந்தன் கரத்தில் தந்து விடு
உன்னைக் கரம் பிடித்து கண் விழித்து
மார்போடு அணைத்திடுவேன்

அக்கினியில் நடக்கும் போது நீ
அக்கினி ஜ்வாலை உன்மேல் பற்றாமல் - 2
ஆறுகளை நீ கடக்கும் போது
உன்னோடு கூட நான் இருப்பேன் - 2 எந்தன்

உனக்கெதிராய் பாளையம் இரங்கி
உன்மேல் ஓர் யுத்தம் வந்திட நேர்ந்தும் - 2
எந்தன் பெலத்தால் மதிலை தாண்டி
சேனைக்குள் பாய்ந்து ஜெயம் பெருவாய் - 2

வெண்கல கதவும் இரும்பு தாழ்பாலும்
முறிந்து போகும் எந்தன் வார்த்தையாலே - 2
முடவர் நடக்க ஊமையர் பேச
எந்தன் ஆவியை உன்மேல் வைப்பேன் - 2

மரண இருளின் பள்ள தாக்கில்
மாந்தரின் அன்பர் பிரியும் போது - 2
மானிடர் கரத்தால் மகிழ்வுடன் அணைக்கும்
மன்னவன் இருக்க கலங்கிடாதே - 2