Skip to main content

எழும்பிடுவீரே வாலிபரே எடுத்திடுவீர் சிலவை கொடியை


எழும்பிடுவீரே வாலிபரே
எடுத்திடுவீர் சிலவை கொடியை
தேவாதி தேவன் செய்த நன்மைகளை
தேசமெங்கும் பறை சாற்றுவோம்

பாவ பாரம் நீக்கி இளைப்பாறுதல் தந்தார்
சாப ரோகம் நீக்கி சுத்தமாக்கினார்
இரட்சிப்பின் வஸ்திரம் எனக்குத் தந்தார்
நீதியின் சால்வை எனக்களித்தார் - விசுவாசத்தாலே

பரிசுத்த ஆவியின் வல்லமை தந்தார்
பரிசுத்த ஜீவியம் காணச் செய்தார்
அந்நிய பாஷைகளைப் பேசச் செய்தார்
தேவாவியாலே அபிஷேகித்தார் - விசுவாசத்தாலே

சாத்தானின் மேல் அதிகாரம் தந்தார்
பாவங்கள் ஜெயிக்க வல்லமை தந்தார்
தேனினும் இனிய வேதம் தந்தார்
தாயினும் மேலாய் நம்மைத் தேற்றுவார் - விசுவாசத்தாலே

மேகங்கள் மீதினில் வந்திடுவாரே
மறுரூபமாக்கி நம்மை அழைத்துச் செல்வார்
ஆயிரம் வருட அரசாட்சியில்
ஆயத்தமாக நீயும் ஓடி வா - விசுவாசத்தாலே