Skip to main content

எந்தன் வாஞ்சை உயர் சீயோனே உந்தன் மகிமை என்று காணுவேன்


எந்தன் வாஞ்சை உயர் சீயோனே
உந்தன் மகிமை என்று காணுவேன்

பார்க்கப் பதினாயிரம் கண்கள் வேண்டுமே
பரிசுத்தர் இயேசு உன்னில் உண்டே
துதிக்க பதினாயிரம் நாவு வேண்டுமே
துங்கவன் உன்னில் வீற்றிருப்பாரே - எந்தன் வாஞ்சை

மகிமை என்றும் உன்னில் நிறைந்திருக்குமே
மங்கள் கீதங்கள் அங்கு முழங்குமே
சீருடை தரித்த கெம்பீர சபையோர்
சிறப்பாய் மகிழ்ந்தங்கு வீற்றிருப்பாரே - எந்தன் வாஞ்சை

வல்லவரைத் தன் வாழ்வில் கொண்டு
வனப்புடன் நிற்கும் சீயோனே
இயேசு ராஜாவின் சத்திய நகரமே
சிலுவையே உந்தன் அஸ்திபாரமே - எந்தன் வாஞ்சை

பரிசுத்தமே எழில் எல்லையே
பரம தேவனின் வாசஸ்தலமே
பரிசுத்த வான்கள் பலகோடி வாழும்
பரலோகமே இன்ப சீயோனே - எந்தன் வாஞ்சை

மணவாளம் என் இயேசு ராஜன் அங்கே
மணவாட்டியாம் தம் சபைக் கெனவே
ஆயத்தப்படுத்தின உன்னிடமே
எப்போது நான் வந்து சேர்வேனோ? - எந்தன் வாஞ்சை