Skip to main content

எக்காள தொனியோடு மானிடரே வாரீர் எக்காலும் இயேசுவையே அறிவிக்கவே வாரீர்


எக்காள தொனியோடு மானிடரே வாரீர்
எக்காலும் இயேசுவையே அறிவிக்கவே வாரீர்
அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா! - (4)

என் இயேசு பொன்னேசு - என்னை
மாற்றியவரும் அவரே
அன்போடும் பண்போடும் என்னை
நடத்தியவரும் அவரே - அல்லே

சந்தோஷம் சந்தோஷம் என்னை
ஆவியிலே நிறைத்தீர்
சங்கீதம் பாடிடுவேன் நான்
சபையிலே சேர்ந்திடுவேன் - அல்லே

சாத்தான் என்னை அணுகும்போது
இயேசுவை கூப்பிடுவேன்
சாத்தானை ஜெயித்தவராம் அவர்
எனக்கும் ஜெயம் தருவார் - அல்லே

அன்பான மானிடரே நீங்கள்
அனைவரும் வாருங்கள்
அன்பான இரட்சகராம் நம்மை
அழைக்கிறார் வாருங்கள் - அல்லே