Skip to main content

என் அன்பரே என் இன்பமே


என் அன்பரே
என் இன்பமே
என் மதுரமே ஸ்தோத்திரம்
என் நேசத்தந்தையே
என் அன்பின் ரட்சகா
என் இன்ப ராஜாவே ஸ்தோத்திரம்

ஆயிரம் பாடல்களை பாடியே ஸ்தோத்திரம்
ஆனந்த தைலத்தால் நிரம்பியே ஸ்தோத்திரம்
அற்புதங்கள் தியானித்தேன்
அதிசங்கள் தியானித்தேன்
அன்பரே இன்பமே ஸ்தோத்திரம்

ஆவியில் ஆராதனை செய்துமே ஸ்தோத்திரம்
அனுதினமும் அன்பினால் நிறைந்துமே ஸ்தோத்திரம்
அஞ்சிடாமல் வாழ்ந்திட
சத்துருவை ஜெயித்திட
அடைக்கலமே மறைவிடமே ஸ்தோத்திரம்

பரிபூரண ஆனந்தமே உம் சமூகம் ஸ்தோத்திரம்
நித்திய பேரின்பமே உம் வலது பக்கம் ஸ்தோத்திரம்
ஆலோசனைத் தந்தீரே
கண்மணி போல காத்தீரே
கேடகமே துரகமே ஸ்தோத்திரம்

காலடிகள் வழுவாது காத்தீரே ஸ்தோத்திரம்
ராக்காலத்தில் ஆலோசனைத் தந்தீரே ஸ்தோத்திரம்
செட்டைகளின் நிழலிலே
என்னை மறைத்துக் கொண்டீரே
உன்னதரே சுதந்திரமே ஸ்தோத்திரம்

விழிக்கும் போது உம் சாயலால் திருப்தியாவேன்
ஸ்தோத்திரம்
நீதியில் உம் முகத்தை நான் தரிசிப்பேன் ஸ்தோத்திரம்
உன்னதத்தில் உம்முடன்
என்றென்றுமாய் வாழ்ந்திட
தந்தீரே இந்த இன்ப பாக்கியம்