Skip to main content

என் இயேசுவே உம்மை அல்லால் மண்ணில் ஆறுதல் ஒன்றுமே கண்டிலேன்


என் இயேசுவே உம்மை அல்லால் மண்ணில் ஆறுதல்
ஒன்றுமே கண்டிலேன்

சுக செல்வ மகிமை பெருமையிbங்கும்
இன்பம் தரும் பொருள் காணேன்
தாகம் பெருகும் தண்ணீரேயின்றி
லோகம் வேறொன்றும் நல்காதே - என்

ஆபத்து காலத்தில் அனுகூலமான
துணையும் நீர் பெலனுமே நாதா
ஆகையால் பூமி நிலை மாறினாலும்
அஞ்சேன் கடல் பொங்கினாலும் - என்

பாழ்மணல் பாதையில் உரியும் வெயிலின்
பரனே உம் கிருபையின் நிழலில்
பாடி மகிழ்வேன் குரசில் புகழ்வேன்
பேரின்ப நாட்டில் நான் வாழ்வேன் - என்

என் நேசர் இயேசுவில் நித்தமும் சார்ந்து
பரதேச யாத்திரை செய்வேன்
பாரினில் பொங்கும் துயரங்கள் தங்கும்
பாரங்கள் ஏதும் நானறியேன் - என்

உமதன்பின் இனிமையை என்றும் ருசிப்பேன்
உலகின் வினைகள் மறப்பேன்
உருகும் என் நெஞ்சம் அருளும் நல் தஞ்சம்
பெருகும் என் இதயத்தின் இன்பம் - என்