Skip to main content

என்னைக் கழுவியருளும் ஈசோப்பினால் சுத்திகரியும்


என்னைக் கழுவியருளும்
ஈசோப்பினால் சுத்திகரியும்
பாவம் துர்க்குணம் பொல்லாப்பு நீங்க
உம் இரத்தத்தால் கழுவும்

துர்குணத்தில் நான் உருவானேன்
உமக்கு விரோதமாய் பாவஞ் செய்தேன்
இரட்சணியத்தின் சந்தோஷத்தை தந்து
உற்சாகமான ஆவியால் தாங்கும் - என்னைக்

கண்களின் இச்சை மாம்ச இச்சை
ஜீவனத்தின் பெருமை யாவுமே
பிதாவினாலுண்டாகாதவையே
என்னை விட்டகற்றிடும் என் இயேசுவே - என்னைக்

ஆத்துமா மண்ணோடு ஒட்டியதால்
ஜென்ம சுபாவமும் என்னில் உள்ளதே
மண்ணின் சாயலை நான்களைந்தே
தேவனின் சாயலை அடைந்திடவே - என்னைக்

கண்களின் காட்சியில் நான் நடந்தேன்
நாவினால் பொல்லாங்கு கூறினேன்
சிந்தையும் நோக்கமும் தீயவையே
என்னிலே பரிசுத்தம் ஏதுமில்லை - என்னைக்

ஜெபிக்கவே தவறிய காலம் பல
அனல் குன்றி வாழ்ந்திட்ட நேரம் பல
உம் சித்தம் செய்யாத சமயம் பல
வேதத்தை கேளாத வேளை பல - என்னைக்

பெருந்திண்டியாலும வெறியினாலும்
லௌகீகமான கவலையாலும்
எந்தன் இருதயம் பாரமாகாமல்
உந்தன் வருகையில் நான் நிற்கவே - என்னைக்